முதல் முறை பார்த்த ஞாபகம்

ஜனவரி 11, 2013

முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்

மழைவரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில்  ஏனோ  ஓர் ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய் மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…

நீ தானே என் பொன் வசந்தம் நீ தானே என் பொன் வசந்தம்
வசந்தம் வசந்தம்

நீந்தி வரும் நிலாவினிலே ஓராயிரம் ஞாபகங்கள்
மின்னலிடும் கனாவினிலே நூராயிரம் தீயலைகள்
நெஞ்சம் என்னும் வினாக்களுக்கு என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்

ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடம் இல்லையே
காதலென்றால் பெறும் காயங்களா அது காதலுக்கு அடையாலங்களா
வெயிலா மழையா வலியா சுகமா எது நீ…

படம்: நீ தானே என் பொன் வசந்தம்

வரிகள்: நா.முத்துக்குமார்

குரல்: சுனிதி சௌகன்

இசை: இசைஞானி இளையராஜா


விவேகானந்தர் – காவித் தலைவன்

ஜனவரி 11, 2013

நாளை விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள். தேசிய இளைஞர்கள் தினம். அவரைப் பற்றிய சிறிய பகிர்வு

கைக்கட்டி இருந்தாலும் நான் தான் முதல்வன் என்பதை போன்ற கம்பீரமான தோற்றம்.எல்லாரும் என்னை நம்பு, சாமிய நம்பு அப்படின்னு ஏமாத்தின காலத்திலேயே “உன்னை நம்பு” அதுவே போதும்ன்னு சொன்னவரு.இந்த தைரியத்தை தான் இந்திய இளைஞர்கள் கிட்டயும் எதிர்ப்பார்த்தார்.”இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில தான் இருக்கு.அவர்களால் மட்டுமே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும்

நம்மள சுத்தி இருக்கறவங்க கூட நம்மலோட பலவீனத்தைப் பத்தித் தான் கிண்டல் பண்ணுவாங்க.அதை தான் பெரிசு பண்ணி பேசுவாங்க.ஆனா விவேகானந்தர் எப்பவுமே பலவீனத்தைப் பத்தி பேசனது இல்ல, நம்மளுக்குள்ள இருக்கற பலத்த பதியும் ஆற்றல் பற்றியும் தான் அதிகம் பேசி இருக்கார்.

“பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்”

“உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.”

“உன்னை நீயே பலவீனன் என நினைத்துக்கொள்வது மிகப்பெரிய பாவம்”

“உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை”

 

மனுசன்னாலே தப்பு பண்ணறவன் தான்.அதுக்காக செஞ்ச தப்ப திரும்ப திரும்ப நினைச்சு நம்மள நாமலே குறைவா நினைக்கக் கூடாது. அதைப் பத்தியும் அழாக சொல்லி இருப்பார்.

“நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.”

விவேகானந்தர் அப்படினாலே தன்னம்பிக்கையின் தலைவன். அவரின் வார்த்தைகள் காலத்தால் அழியாதவை, என்றைக்கும் தேவைப்படுவது.

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”

“எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது”

விவேகானந்தர் ஒரு ஹிந்துவா இருந்தாலும் அவர் என்னைக்குமே என் மதம் தான் பெரியது என்று சொன்னது கிடையாது.அவர் எப்பவுமே சொல்றது “கடவுள் ஒருவரே“.

எனக்கு ரொம்ப பிடிச்ச விவேகானந்தரோட ஒரு பொன்மொழி இது “பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்

விவேகானந்தர் பத்தி இன்னும் சொல்லிட்டே போகலாம்.அவர பத்தின இரண்டு உண்மை சம்பவங்களைக் குறிப்பிட்டு இந்த போஸ்ட்ட முடிக்கிறேன்.

சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த நேரம். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் பயணம் செய்த ஆங்கிலேயர்களுக்கு இவரைப் பார்த்து இளப்பம்.மிக ஏளனமாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள் காவித்துணி அணிந்தவருக்கு எங்கே ஆங்கிலம் புரியப் போகிறது என்ற அலட்சியத்தோடு.

சிறிது நேரம் கழித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் சுவாமியின் தோற்றத்தின் வசீகரத்தினால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் உரையாடி விட்டு சென்றார். உடன் பயணம் செய்து, சுவாமியை ஏளனம் செய்தவர்களுக்கோ திகைப்பு, இவ்வளவு கண்ணியமான ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே என்று.

“சுவாமி, உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, அப்புறம் ஏன் நாங்கள் உங்களை ஏளனமாகப் பேசிய போது, அமைதியாக இருந்தீர்கள்?” என்று வினவினார்கள்.

சுவாமி புன்முறுவலோடு விடையளித்தார்:

“முட்டாள்களோடு பயணம் செய்வது எனக்குப் புதிய அனுபவம் ஒன்றுமில்லை!”


ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், “உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்றாளாம். அதற்கு அவர், “நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!’ என்றாராம்.


நினைவு கனவுகள்

ஜனவரி 10, 2013

நாலு பக்கம் இழுத்து சாத்தியும்
நினைவுகளை மட்டுமே
நிரப்பிக் கொண்டிருந்தது இதயம்…

திசைத்திருப்ப முயன்று
அவசரமாய்
ஆட்டமிழந்தது மூளை …

அடுத்தடுத்து ஆட்டமிழந்தும்
சரிவிலிருந்து மீட்கும்
தோனி போல
கடைசியாய் கைக்கொடுத்தது
தூக்கம்…

இருந்தும் ஜெயித்தது
நினைவுகள்
கனவாய் மீண்டு வந்து…


மனப் பிறழ்வுகள்

ஜனவரி 10, 2013

தேவைகள் இல்லாத தேடல்கள்
இலக்கில்லாத பயணங்கள்

பேசப் பிடிக்காமல் பேசும் கட்டாயங்கள்
புரிதல்கள் இல்லாத தலையாட்டல்கள்

காரணங்கள் தேடும் பிரிவுகள்
வார்த்தைகள் தேடும் மௌனங்கள்
நேற்றைகளில் வாழும் இன்றுகள்

குழப்பங்களைத் தாண்டியும்
இயல்பாய் வாழ்க்கை நகரும்
எந்த சம்மந்தமும் இல்லாத
இந்த வார்த்தை குவியல்களை போல …


விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள்

ஜனவரி 9, 2013
விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழா 2013 ஜனவரி 12 ல் கொண்டாடப்படுகிறது.
இதற்காக சென்னையில் உள்ள ராமகிருஷ்ண மடம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் முக்கிய அம்சமாக விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழா Logo வை வடிவமைத்து அதனை Google இணையதளத்தின் முகப்பில் வெளிவர வைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக Google க்கு அனுப்ப மின்னஞ்சல் மாதிரியை வடிவமைத்துள்ளது.
வாசகர்கள் அனைவரும் இதனை Google க்கு மின்னஞ்சல் அனுப்பி விவேகானந்தரின் புகழ் மீண்டுமொருமுறை உலகறியச் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கான இணையம்:
http://www.chennaimath.org/proposal-for-swami-vivekananda-in-google-home-page-spread-the-word-1556

வெள்ளைக் காகிதம்

ஜனவரி 4, 2013

- கலீல் கிப்ரான்

கவிதையாய் [படித்த இடம் http://tamilgibran.blogspot.com ]

வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய் , பரிசுத்தமா ய் இருந்தது..

அது சொன்னது,
“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”

கறுப்பு மைப்புட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியப டி
பரிசுத்தமா னதாகவே இருக்கிறது ..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது ..!!!

கதையாய் : [மிட்டாய் கதைகள் - என் சொக்கன்]

காலை பனி போல் தூய்மையாய் இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் ‘நான் ரொம்ப சுத்தமானாக்கும்’ என்று அலட்டிக்கொண்டது.நான் பிறக்கும் போதே தூய்மையாய் பிறந்தேன்,காலம் முழுவதும் தூய்மையாகவே இருப்பேன்,என்னை எரித்து சாம்பல் ஆக்கினாலும் பரவாயில்லை பொறுத்துக்கொள்வேன்.ஆனால் கருமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன்,தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில் கூட வரமுடியாது.’

இந்த பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கி குலுங்கி சிரித்தது.அந்த காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவு செய்துக்கொண்டது.பல வண்ண பென்சில்களும் இதை கேட்டன.அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளை காகிதம், அதன் ஆசைப்படி என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது…வெறுமையோடு…

அசல் :

Said a sheet of snow-white paper, “Pure was I

created, and pure will I remain for ever. I would rather

be burnt and turn to white ashes than suffer darkness

to touch me or the unclean to come near me.”

The ink-bottle heard what the paper was saying,

and it laughed in its dark heart; but it never dared to

approach her.

And the multicolored pencils heard her also, and

they too never came near her.

And the snow-white sheet of paper did remain pure

and chaste forever, pure and chaste – and empty.


தலைவர் ஸ்பெஷல்

திசெம்பர் 12, 2012

தலைவர் பொறந்து 62 வருஷம் முடிச்சு போச்சு. நான் யாருக்கும் ரசிகை இல்லைன்னு வெளியே சொல்லிகிட்டாலும் சின்ன வயசில இருந்தே நான் தலைவர் fan தான். யாருக்கு தான் ரஜினிய பிடிக்காம இருக்க முடியும் அந்த சின்ன கண்கள், நடக்கிற ஸ்டைல், ஸ்டைலா பேசற இங்கிலீஷ், ‘கண்ணா’ன்னு கூப்பிடற அழகு. நான் மட்டும் இல்ல சின்ன பொடுசுகள கேட்டாலும் ‘நா ரஜினி ரசிகன்னு’ ஸ்டைலா சொல்றாங்க.

கமல் மாதிரி ரஜினிக்கு நல்லா நடிக்க தெரியாது, நல்ல டான்ஸ் ஆட தெரியாது இப்படி யாராவது சொன்னா எனக்கு கோவம் தான் வரும்.யாரையும் யாரோடயும் compare பண்ண கூடாது.ரஜினி ரஜினி தான் கமல் கமல் தான். எங்கிட்ட இருக்கற அநேக படங்கள் தலைவரோடது மட்டும் தான். கமர்சியல்ன்னு சொன்னாலும் அதுல ரஜினிய தவிர வேற நடிச்சிருந்தாலும் படம் ஓடியிருக்காது.அவர் நடந்து வந்தாவே விசில் பறக்கும்.
நான் பார்த்த முதல் ரஜினி படம் ‘தளபதி’. நட்புன்னா என்ன ரஜினின்னா என்ன ரெண்டும் ஒன்னு தான். இது படத்திலயும் நிஜத்திலும் உண்மை. ‘சின்ன தாயவள்’ பாட்ட பார்த்தாலும் சரி கேட்டாலும் சரி, ரஜினியோட அந்த சோகமான முகம் என் கண்ணுக்குள்ளே இருக்கும்.

படையப்பா படம் ஒரு பக்கா கமர்சியல் படம்னாலும், ரம்யா கிருஷ்ணன் சூப்பரா ஒரு டயலாக் சொல்லுவாங்க ‘வயசானாலும் உன் அழகும் உன் ஸ்டைலும் உன்னை விட்டு போகல′. என்ன ஒரு நிதர்சனமான உண்மை. எந்திரன்ல பார்த்த ரஜினியும் எனக்கு ஒன்னு தான் தளபதில பார்த்த ரஜினியும் ஒன்னு தான். இன்னைக்கு வரைக்கும் அந்த சுறுசுறுப்பு, அந்த ஸ்டைல், அந்த களை இன்னும் உங்கள விட்ட போகல. போகவும் போகாது.

தலைவரப் பத்தி சொல்லிட்டு அவரோட பஞ்ச் டயலாக் சொல்லாம போனா நல்ல இருக்காது.அதனால ஒரு சில இங்கே.

“கண்ணா பண்ணிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்” (இந்த டயலாக் ஏற்கனவே முதல்வன் படத்தில அர்ஜுன் சொல்லி இருப்பார். அப்போ அது ரீச் ஆச்சான்னு தெரியல ஆனா சிவாஜில செம ரீச்)

“நா எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்”

“இது எப்படி இருக்கு” [ How is it என்று வீரா படத்திலும் சொல்லுவார்]

“நா ஒரு தடவ சொன்ன 100 தடவ சொன்ன மாதிரி”

கடைசியா ஒன்னு.. இது பஞ்ச் டயலாக் கிடையாது. ஆனா இத ரசிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. எந்திரன் படத்தில ரோபோ ரஜினி அசல் ரஜினிய கண்டுபிடிக்கறப்ப ஒன்னு சொல்லவர் பாருங்க  …

”மே Black Sheep” தலைவா you are great

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா ….


Follow

Get every new post delivered to your Inbox.

Join 54 other followers