நான் எப்போது பெண்ணானேன் ? ? ?
என் இதயம் கண்களில் வந்து
இமையை துடித்தது ஏனோ
நான் எப்போது பெண்ணானேன் ?
முதல் புன்னகை பூத்தது அப்போதா
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றான் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்?
அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து-விடு
என்னை உன்னில் கொண்டு சென்று-விடு
நான் எப்போது பெண்ணானேன்?
உன் பார்வை காய்ந்ததே அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகள் மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்?
- சக்கரக்கட்டி
Categories: பாடல்கள்
hellooooo…
பிரியா , உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும்
Naan kooda maati konden…
Its all because of Adaleru…