முகப்பு > கவிதைகள் > நினைவுகள்….

நினைவுகள்….

பிரிந்தபடி இணைந்திருந்தோம்
இணைந்தே பிரிந்தோம்…
ஒரு நொடி ஒரு நிமிடம்
ஒரு மணி நேரம் என
ஒரு மாதமானது….

பேசுவாய் என தெரிந்தும்
பேசாமலே இருக்கின்றேன்
உ(எ)னக்காக….

——————————————-

உன்னை நினைக்க மறுத்து
மறக்க நினைத்து
எதெதோ செய்கிறேன்….
எங்கேயோ இருந்தும் அனிச்சை செயலாய்
இருக்கிறாய் நீ…..
வேண்டாம் என்று சொன்னாலும்
துடிக்கின்ற இதயத்தை போல…..

———————————————-

நான் தான் நீ ….
நீ தான் நான் ….
பிரிவு நமக்கில்லை என
எதெதோ சொல்லி
எனை தேற்ற முயல்கிறாய்…..

உண்மை எதுவென உணர்ந்தும்
‘அந்த சாக்லேட் தான் வேண்டுமென’
அடம் பிடிக்கும் குழந்தையாய்
உன்னிடமே மீண்டு(ம்) வருகிறது
நினைவுகள்….

– பிரியா

  1. kannan.S
    10:40 மு.பகல் இல் நவம்பர் 17, 2009 | #1

    chillna en oru sharal en idhayahthia thodu senrathu

  2. 8:30 மு.பகல் இல் நவம்பர் 21, 2009 | #2

    நன்றி பிரியா.

    இந்த கவிதையை படித்தபின் மீண்டும் என் மனது பழைய நினைவுகளில் மூழ்கத்துடங்கி விட்டது.

  3. 8:35 மு.பகல் இல் நவம்பர் 21, 2009 | #4

    E s w a r :நன்றி பிரியா.
    இந்த கவிதையை படித்தபின் மீண்டும் என் மனது பழைய நினைவுகளில் மூழ்கத்துடங்கி விட்டது.

    என் மனதில் உள்ளதை அப்படியே கவிதை வரிகளில் காண முடிகிறது.

    கண்ணன் சொன்னது போல் இக்கவிதை இதயத்தை வருடத்தான் செய்கிறது.

  1. 8:16 மு.பகல் இல் நவம்பர் 21, 2009 | #1