உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத் தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன்
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீயில்லையென்றால் என்னாவேன்
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் பறவைகளோடு
பெண்ணே பெண்ணே
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை …
குரல் : நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோசல்
வரிகள் : நா. முத்துக்குமார்
படம் : அங்காடி தெரு
இசை : G .V பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி
super songs